Friday, June 24, 2011

மல்டிமீடியா (MULTIMEDIA) படிக்க ஆசையா?

இன்றைய நவீன யுகத்தில் கணினி என்பது தவிர்க்........ ஸ்.....! நேராக மல்டிமீடியா பற்றிய விசயத்திற்கு வரேன்.

மல்டிமீடியா என்றால்?
மல்டி = பல : மீடியா = தொடர்பு கொள்ள உதவும் சாதனம் ?
நாம் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் எழுத்து
(Text), வரைபடம் (Image), சப்தம் (sound), & காணொளி (Video) ஆகியவை சேர்ந்த கலவை இந்த மல்டிமீடியா. இதன் சம்பந்தமான மென்பொருட்கள் பற்றிய அறிவு, பல தனியார் கல்வி நிறுவனங்களில் மல்டிமீடியா என்ற பிரிவில் கற்றுத்தரப்படுகின்றது. அங்கு சென்று படிக்கும் எண்ணம் இருந்தால் இந்த பதிவு நிச்சயம் பயன்படும். இல்லையென்றால் ஒரு பொது அறிவை வளர்த்துக்கவாவது படிங்க.



பிரிவுகள்?

முன் சொன்னது போல
4 பிரிவுகளை (Text, Image, Audio, Video) அடிப்படையாக கொண்டு இந்த படிப்பு வகைப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில்

1. Graphic Design (வரைகலை வடிவமைப்பு)
2. Web Design (வலைத்தள வடிவமைப்பு)
3. 2D Animation (இரு பரிமாண அசைவு ஊட்டம்)
4. 3D Animation (முப்பரிமாண அசைவு ஊட்டம்)
5. Audio & Video Editing (ஒலி & ஒளி தொகுப்பு)
6. Visual Effects (vfx)

ஆகிய படிப்புகளே பிரதானம்.

1.Graphic Designing

மென்பொருட்கள் : PageMaker, CorelDraw, Adobe Indesign, Adobe Illustrator, Adobe Photoshop

கல்வி நிறுவனங்களை பொறுத்து இதில் ஏதாவது மூன்று மென்பொருட்களை மட்டுமே இந்த வரைகலை வடிவமைப்பு பகுதியில் சொல்லி கொடுக்கின்றார்கள். இந்த மென்பொருட்களில் போடோஷாப் மிக முக்கியமானது. காரணம் புகைப்பட துறையில் இதை மிக அதிகமாக பயன்படுத்துகிறார்கள். கீழ்மட்ட DTP (Desktop publishing) சிறுகடைகள் முதல் பெரிய IT நிறுவனங்கள் வரை பயன்படுத்துகின்றார்கள். எனவே எல்லா நிறுவனங்களிலும் போட்டோஷாப் தவிக்க முடியாமல் பயிற்றுவிக்கப்படுகின்றது. பேஜ்மேக்கர் அழைப்பிதழ் வரைகலை செய்யப்படும் துறைகளில் கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆனால் இதை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் சொல்லிகொடுப்பதில்லை. CorelDraw & Illustrator வேலை செய்யும் முறை ஒன்றுதான் (vector graphics software), ஆனால் கருவிகளும் பயன்படுத்தும் வழிமுறைகளும் வேறு. Illustrator பெரும்பாலும் பன்னாட்டு வேலைகளை செய்து கொடுக்கும் நிறுவனங்களிலும், CorelDraw உள்நாட்டு வேலைகளை செய்யும் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. In design & quark express போன்ற மென்பொருட்கள் பத்திரிக்கை துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

பயன்பாடுகள்:
நாம் பார்க்கும் அசையாவண்ணம் உள்ள அனைத்து எழுத்து மற்றும் படங்கள் கொண்ட, பேருந்து பயணச்சீட்டு முதல் பெரிய பெரிய சுவரொட்டி, வண்ண பதாகை (Banner) வரை எல்லாம் இந்த மேற்கண்ட ஏதோ சில மென்பொருட்களை பயன்படித்தியே வரைகலை செய்யப்பட்டு இருக்கும்.

வேலை வாய்ப்பு ?
கல்விநிறுவனங்களில் சேரும் போதே அந்த கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு (
placement assistance) சரியான முறையில் தங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்துகொண்டு பணம் கட்டுவது நல்லது. அதோடு நில்லாமல் அங்கு படித்து வேலை வாய்ப்பு பெற்ற நபர்களின் பெயர் மற்றும் கைப்பேசி எண்ணை நிர்வாகத்திடமிருந்து வாங்கி அவர்களிடம் உறுதி செய்துகொள்ளவும். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களில் யாரைவது சிலரை வெளியில் தனித்தனியாக சந்தித்து அங்கு சரியான முறையில் பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்துகொள்ளவும். அதிக கட்டணம் வாங்கும் இடத்தில் நல்ல தரமான கல்வி கிடைக்கும் என்று நம்ப வேண்டாம். கட்டணத்திற்கும் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆசிரியர்களை பொறுத்தே கல்வியின் தரம் இருக்கும். இந்த துறையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேகமாக தட்டச்சு செய்வதும் (type writing), அடிப்படை வண்ணங்களை (color sense) பற்றிய அறிவும், குறைந்த பட்ச வரையும் திறனும்(drawing) முக்கியம். இதில் குறைந்தபட்சம் ஆங்கிலம் மட்டுமாவது வேகமாக தட்டச்சு செய்ய கற்றுக்கொள்ளவும்.

சிறு கடைகளில் (
10th) 4000 ரூபாய் சம்பளமும், பெரிய நிறுவனங்களில் (degree must) 8000 ரூபாய் சம்பளமும் ஆரம்பத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. லட்ச லட்சமாக சம்பாதிக்க உடனே வாங்க என்று அழைக்கும் கல்வி நிறுவனங்களை நம்ப வேண்டாம். அனுபவம் இல்லாத நிலையில் பெரிய நிறுவனங்களில் வேலையில் சேர நிச்சயம் நமக்கு ஒரு ஆள் அந்த நிறுவனத்தில் இருந்து உதவி (recommendation) செய்ய வேண்டி இருக்கும்.

போதுமான வருமானமும் கணிணித்துறையில் வேலைசெய்துகொண்டு இருக்கின்றேன் என்ற மன திருப்பதியும் கிடைக்க, அதிக கல்வி வாய்ப்பு பெற முடியாது என்ற நிலையில் உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு இந்த துறை ஒரு நல்ல ஆரம்பம்.

வலைத்தள வடிவமைப்பு பற்றிய பதிவில் மீண்டும் சந்திப்போம்.

CSC குறைந்த கட்டணத்தில் அடிப்படை கல்வியையும், IMAGE அதிக கட்டணத்தில் நல்ல வேலை வாய்ப்பையும் தருகின்றது என்று கேள்வி பட்டு இருக்கின்றேன். எங்கு சேர்ந்தாலும் சுயமாக கற்றுக்கொள்ள தங்கள் திறனை வளர்த்துக்கொள்வது நல்லது.

No comments: