Tuesday, May 31, 2011

ஹௌ டு போஸ்ட் ப்ளாக் வித்தௌட் இங்க்லீஷ்?

ஆக்சுளி, ஐ டோன்ட் டோன்ட் லைக் தமில் லாங்குவாஜ்.. அப்படின்னு சொல்லற கூ முட்டைகளை அப்பறமா வைச்சிக்கி்றன். ஆமாம் கூ முட்டை னா எந்த மொழி? அதை அப்பறம் பார்த்துக்கலாம்.


ஏன் இந்த திடீர் கொலை வெறினா, ஒரு ஓ சி பார்க்ல (park = பூங்கா . ஓசி=?) சும்மா உட்காந்துகினு இருந்த அப்போ ஒரு டாடி அவங்க பொண்ணுகிட்ட (6 ஏஜ் தான் இருக்கும்) டால்கிங் பண்ணிட்டு இருந்தார். அந்த கேர்ள் சொல்லிச்சி " அப்பா , அண்ணன் எங்கூட ஒழுங்கா விளையாட மாட்டேன்கிறான் பா" னு. அதுக்கு அந்த டாடி "ஒய் ரமேஷ்? ப்ளே வித் ஹேர் , அண்ட் பி கேர்புள்" னு. சொல்லிட்டு அவர் போனை எடுத்து யார்கிட்டையோ பேசினார் பாருங்க? (யார்என்ன பேசின உனக்கு என்ன ? நீ ஏன் ஒட்டு கேட்ட? அப்படின்னு எல்லாம் கேட்ககூடாது காரணம் அது ஒரு பப்ளிக் பிளேஸ் ) என்ன பேச்சு? அது தமிழ் தான். ஆனா என்னால தான் புரிஞ்சிக்க முடியல போல? அந்த சின்ன பொண்ணு எவ்ளோ அழகா தமிழ் பேசுதுன்னு சந்தோசப்பட்டன் சாரி மகிழ்ச்சியுற்றேன். ஆனா அந்த அப்பா பேசுன இங்க்லீஷ் நல்லா இருந்தாலும் (எனக்கு மட்டும் ஒரு வேலை இப்படி தோணுதோ?) தமில் ரொம்ப கஷ்டம் டா சாமி. அந்த பொண்ணும இவர் மாதிரி தமிழ் பேச ஆரம்பிச்சா இதுக்கு பொறக்கும் குழந்தை தமிழை என்ன மொழியா மாத்திட்டு போகுமோ தெரியல.


அது என்னவோ ஒரு விளையாட்டு னு அந்த டாடி இங்க்ளிஷ்ள சொன்னார். எனக்கு தான் புரியல. மேல இருக்கற விளையாட்டு தான். சின்ன வயசுல அப்பா கால்ல ஏத்தா மர தோழி னு பாடியும் , மாட்டு வண்டி நெவுத்தடில ஆடியதோட சரி நம்ம ஆட்டம் எல்லாம்.. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். அவங்களை விடுங்க. அவங்க எல்லாம் ரிச் பீப்புல்ஸ். (ரிச் பீபுல்ச்க்கு ஓசி பார்க் ல என்னவேலை? = நல்லா கேட்கரான்கையா டீடைலு). ஆனா இணையத்தை பயன்படுத்தும் (ஆக்கபூர்வமாக) நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் (நடுத்தர வர்க்கம்) குறைந்த பட்சம் ஒரு மொழியையாவது தவறின்றி உச்சரிக்க பழகிக்கொள்ள வேண்டாமா?

அதுவும் நாம் எல்லாம் தமிழ் (ழில்) எழுத்தாளர்கள் (எழுதுபவர்கள்). (இல்லையா பின்ன) நாம் கூட நம் மொழிக்கு மரியாதை தரவில்லை என்றால் வேறு யார் தருவார்கள்? பண்டங்களில் கலப்படம் உடலுக்கு கேடு. மொழிகளில் கலப்படம் ?

நாம் ஒன்றும் அவ்வை தமிழை எழுத வேண்டிய கட்டாயமில்லை (எ.கா : பின்நவினத்துவம் . எத்தனையோ ப்ளாக் (வலைப்பூ) ல பார்த்துட்டேன் . அர்த்தம் மட்டும் புரியவே இல்ல). எட்டாம் வகுப்பு தமிழ் உரைநடை பாடப்புத்தகத்தில் உள்ள தமிழை எழுதலாம் இல்லையா? சரளமான தமிழ் கூட வேண்டாம். பேச்சுமொழித்தமிழ் போதும்.

அதை வேற்று மொழி உச்சரிப்பு இன்றி எழுத அட்லீஸ்ட் (குறைந்த பட்சம்) முயற்சி செய்யலாம் அல்லவா?

மேற்கண்ட வாக்கியத்தில் இப்போதைக்கு அட்லீஸ்ட் ஐ இது போல வெளியே சொல்லி தமிழை பிராக்கெட் (அடைப்புக்குறி) க்குள் சொல்ல ஆரம்பியுங்கள். போகப்போக தானாகவே தமிழ் வெளிய வந்து ஆங்கிலம் உள்ளே சென்று விடும். எனக்கு நிறைய வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தெரியாதே னு சொல்றவங்களுக்கு இணையதள தேடு பொறி உதவும் என்று நம்புகின்றேன். அல்லது எனக்கு தெரிந்த ஒரு வலைப்பக்கம் இங்கே அழுத்தவும்.

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் , எனக்கும் நிறைய தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்த புண்ணியம் வந்து உங்களை சேர வேண்டும் என்று நான் எதிர்பார்கின்றேன். ம்ஹும் . சேரட்டும்.

அப்பறம் முடிஞ்ச இந்த வலைப்பூவில் இந்த பக்கத்தை படியுங்கள்.

இஷ்டம் இருந்தா ஏத்துக்கங்க. இல்லனா முயற்சி செய்யுங்க. இப்படியே விட்டா அடுத்த தலைமுறை மாணவர்களின் தேர்வுகளில் கீழ்கண்ட கேள்வி இடம் பெரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.


1.தொல்காப்பியம் என்ற நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

a) தமிழ் b) ஆங்கிலம் c) சமஸ்கிருதம் d) பட்டம் விடுற நூல் எந்த மொழியில் இருந்தா என்ன?



தண்டோரா: போன பதிவை இன்ட்லி ல ஓட்டு போட்டு பிரபலமாக்கின 19 நண்பர்களுக்கும் நன்றி.
ஏன் கூ முட்டை னு சொன்னன்னா தமிழ் தெரியவதாவங்களா நீங்க இருந்தா இந்த பதிவை எப்படி படிக்க முடியும்? எப்படி உங்களால எழுத முடியும்?.
அப்பறம் அந்த மாதிரி i don't like Tamil னு பீட்டர் விட எப்படி மனசு வரும் ?
ஆமாம் பீட்டர் னா எந்த மொழி?

ஆளை விடுப்பா சாமி........!


வல்லினம் மெல்லினம் இடையினம் உள்ள நம் தமிழ் பிடிக்கவில்லை எனில் வேறு எந்த மொழி பிடித்துவிடப்போகின்றது?

Wednesday, May 25, 2011

horton hears a who? - ரொம்ப ஆடாதே. உலகம் ரொம்ப சின்னது

Horton hears a Who - 1954 லில் dr.seuss என்பவரால் எழுதப்பட்டு புத்தகமாக வெளிவந்த கதை. அந்த கதையை 2008 இல் ஒரு முப்பரிமான அசைவூட்டத்தில் (3D animation ) திரைப்படமாக்கி இருக்கின்றார்கள் Blue sky studios நிறுவனத்தினர்.

இந்த பதிவும் திரைப்படத்தை பற்றிய ஒரு அறிமுகம் தான். ஹோர்டன் ஒரு செம ஜாலியான யானை. அவரது நண்பர்கள் சிலர். ஆனா அவங்க யாரும் இவர் சைசுக்கு இல்ல. காட்டுல சந்தோசமா சுத்தி வர கேங். அதே காட்டுல ரொம்ப திமிரா சுத்திவர (தமிழ் பட வில்லன்மாதிரி) வில்லி கங்காரு. அது மடியில ஒரு குட்டி. ஒரு நாள் இந்த யானை ஆத்துல குளிச்சிட்டு வரும் போது ஒரு சின்ன பஞ்சு (இங்கிலிஷ்ல ஸ்பெக் னு சொல்லராங்க) ஒன்னு பறந்து கடந்து போகுது.


அப்படி அந்த பஞ்சு கடக்கும் போது ஒரு சத்தம் வருது. யாரோ அதுக்குள்ளே இருந்து பேசற மாதிரி. உடனே அந்த பஞ்சை பிடிக்க அதன் பின்னாடியே ஓடுது நம்ம ஹோர்டன். ஏன் நம்ம ஹோர்டன்? ஹ்ம்ம். அது குளிக்கற அந்த முதல் காட்சியை பார்த்தாலே தெரியும் , அது நம்மளையும் ஒரு சின்ன குழந்தையோட மன நிலையில் கொண்டு போய் விட்டுவிடும். அவ்ளோ அழகு.
அப்படி அந்த பஞ்சை பிடிக்க ஓடும் போது சில விலங்குகளை தொந்தரவு செய்யுது ஹோர்டன். (பெருசு இல்ல யானை ஓடும் போது பூமி குலுங்க தானே செய்யும்.) அதுல வானரமும் ஒன்னு. உடனே அந்த வானரங்கள் (புரியலையா? அதன் பா குரங்கு ---தமிழ் புரிய மாட்டேங்குது இல்ல?) எல்லாம் ஒன்னு சேர்ந்து தாக்குதுங்க பாருங்க யானையை....! அட அட அட... AK 47 ஐ எல்லாம் ஓரம் எடுத்து வைச்சிடலாம்.


எப்படியோ ஒரு வழியா அந்த பஞ்சை ஒரு பூவுல புடிச்சிடறார் நம்ம ஹோர்டன். அதன் பிறகு அந்த குரல் எங்க இருந்து வந்ததுன்னு தேடறார். அந்த டைம் la கேமெராவ zoom பண்ணி உள்ள போன அங்க அந்த பஞ்சுக்குள்ள ஒரு உலகம் இருக்குது. அங்க மனிசனுங்க வாழறாங்க. அந்த மனுஷ கூட்டத்துக்கு ஒரு தலைவர் (மேயர்). அவர் கூட பேசி இந்த யானை நண்பனாகி விடுகின்றது. அதுக்குள்ள நிறைய சுவாரிசியமான நிகழ்வுகள் இருக்கு. படம் பாருங்க. அப்ப தெரியும். அந்த மனிசனுங்க கிட்ட உங்க உலகம் ரொம்ப சின்னது அது என் மூக்கு நுனியில இருக்கு என்ற உண்மையை சொல்லி புரியவைக்கறதுக்குள்ள .....! யானைக்கு மேல் முச்சு கீழ் முச்சு எல்லாம் வாங்கிடுது. அப்பறமா உங்க உலகம் பறந்துகிட்டு இருக்கு. இப்படியே போன அழிஞ்சிடும். நான் எங்கனா ஒரு பாதுகாப்பான இடத்துல வைக்கரன்னு சொல்லி எடுத்துக்கிட்டு போகுது.



அந்த உண்மையை மேயர் அங்க இருக்கற மக்களிடம் சொல்லும் போது அவருக்கு இருக்கற எதிரிங்க (இந்த மனுசங்களே இப்படித்தான் போல) இவரை பைத்தியம்னு சொல்லி துரத்திடறாங்க. இந்த டைம் ல கங்காரு ஒரு ஆளை (கழுகு) செட் பண்ணி இந்த பூவை தூக்கிட்டு போய் தொலைக்க சொல்லி கட்டளை இட அந்த பூவை காப்பாத்த யானை போராட ....... அது பெரும் கதை. ஆனா செம பக்கா.....! செம செண்டிமெண்டும் கூட.. தொலைந்து போன பூவை யானை தேடும் போது நமக்கே கண்ணுல தண்ணி வந்துடும். (பின்னணி இசை கூட காரணமாக இருக்கலாம்)

ஒரு வழியா அந்த பூவை யானையிடம் இருந்து பறிச்சு கொதிக்கற எண்ணையில (அது ஒரு மாதிரியா இருக்கு) போட விலங்குகள் எல்லாம் முடிவு பண்ண அந்த டைம்ல யானை, இருங்க உள்ள இருக்கறவங்கள பேச சொல்லறன்னு ஒரு வாய்ப்பு கேட்க்குது. பட் அந்த டைம் ல மேயரால பேச முடியாத நிலைமை. எல்லாம் கூட இருக்கற மத்தவங்களால தான். உடனே இந்த யானை சொல்லறது எல்லாம் பொய்னு முடிவு பண்ணி அந்த பூவை கொதிக்கற எண்ணையில அந்த கங்காரு போட்டுவிடுது.

அய்யய்யோ... அப்பறம்? அப்பறம் என்ன ? படத்தை பார்த்து தெரிஞ்சிக்கங்க.

அந்த கழுகும் கங்காருவும் என்ன வில்லத்தனம் பண்ணுது..! பட் கங்காரு குட்டி சோ ஸ்மார்ட்.

எவ்வளவோ அட்டகாசமான சீன் இருந்தாலும் அந்த முதல் கட்சி இருக்கே...! நிஜத்துலகூட அப்படி காட்சியை படம் பிடிக்க முடியாது.

படத்தோட லாஜிக் மற்றும் ஒன் லைன் எல்லாமே அந்த கடைசி ஷாட் தான்.

இதை வேற யாருனா சொன்ன கை தட்டுவோம். நம்ம ஆளுங்க சொன்ன ? எப்பவும் போல போடா காமெடி கீமெடி பண்ணாத னு சொல்லிட்டு போய்டுவோம்.




படத்தை பார்த்துட்டு இந்த போஸ்ட் டைட்டில் ஐ படிச்சி பாருங்க.

இதை குழந்தைக பார்க்கற பொம்மை படம்னு நினைச்சி மிஸ் பண்ணிடரதுக்கு பதிலா கொஞ்ச நேரம் குழந்தையா மாறி பார்க்கர அனுபவம்னு என்ஜாய் பண்ணுங்க சார் அண்ட் மேடம்...!


தண்டோரா: இதனால சகலவிதமானவர்களுக்கும் சொல்லிகிறது என்னன்னா என்னோட கடைசி பதிவை இன்ட்லி ல பாப்புலர் ஆக்குன அந்த 18 தோழர்களுக்கும் , கருத்துகளை சொன்ன 7 நண்பர்களுக்கும் . 500 க்கும் மேல ஹிட்ஸ் கொடுத்த வாசகர்களுக்கும் நன்றி சொல்லிகிறேனுங்க சாமியோவ்....................!

இப்படியே போன சீக்கிரம் ரீச் ஆகிடலாம் போல இருக்கே..?

Tuesday, May 24, 2011

கொய்யால...! யார்கிட்ட வெச்சிகிறீங்க?


லீக்கோட லாஸ்ட் மேட்ச்ல டாஸ் வின் பண்ணி எங்க தலைய பேட் பண்ண சொல்லி 20 ஓவர் ல 8 பேரை கழுத்தை புடிச்சி வெளிய தள்ளி 128 ரன்க்கு மேல போன போது பாவம்னு கூட பார்க்காம 10 ரன் மட்டும் எக்ஸ்ட்ரா கொடுத்து, அடுத்து பேட் பண்ண ஒரு அடியாள (ஆப் ல போற பந்தை கூட மடக்கி லெக்ல அடிக்கறான் பாரு சிக்ஸர்...!) அனுப்பி அவனை கடைசி வரைக்கும் அவுட் ஆகாம ஆட சொல்லி 18 ஓவர்ல அந்த ரன்னை அடிக்க வைச்சி அவனுக்கே ஆட்ட நாயகன் விருதையும் (என்னது ஆட்ட நாயகன் சக்தியா? ஏம்பா இங்க என்ன படமா ஓடுது?) வாங்கி கொடுத்து சந்தோஷ பட்டீங்க இல்ல? அது மட்டும் இல்லாம எங்க தலையோட டீம் ஐ செகண்ட் பிளேஸ்க்கு தள்ளீட்டீங்க. ஏதோ மும்பை ஜெயித்ததால தல டீம் அங்கேயே இருந்துச்சி. இல்லனா மூனாவது இடத்துக்கு இல்ல போயிட்டு இருக்கும்? அதுக்கு தான் இந்த பிளே ஆப் மேட்ச் ல உங்களை ஆப் பண்ண தலை முடிவு பண்ணி இருக்கு போல.!

அதான் இந்த முறை அதே போல டாஸ் வின் பண்ணி உங்களை பேட் பண்ண வைச்சி, உங்களை மாதிரி சல்லித்தனமா 128 ரன்னுக்கு வெளிய தல்லாம 175 ரன் கொடுத்து (எக்ஸ்ட்ரா 14 ஞாபகம் வைச்சிக்கோங்க) உங்களை கௌரவப்படுத்தினோம். ஏன்னா எங்களுக்கு ஆப்போசிட் டீம் அடிச்சா ரன்லியே இது தான் அதிகம். (நல்லா காலம் அந்த அடியாள் சீக்கிரம் அவுட் ஆகிட்டான்- இல்லனா மேட்ச் என்னத்துக்கு ஆகிறது? எவ்ளோ பால் மாத்த வேண்டி இருந்து இருக்குமோ? விளையடிக்கினு இருக்கும் போதே பாலை தூக்கி வெளிய அடிச்சிடரன்யா அவன் )
அவரை அவுட் ஆக்கின புண்ணியம் நம்ம அஸ்வினுக்கு வந்து சேர்ந்தது. சின்ன புள்ள தனமா ஸ்டம்ப்க்கு போற பாலை காலால தடுத்தா? அதான் அம்பயர் இவரை வெளிய போய் எங்கனா சின்ன பசங்க கூட ஆட சொல்லி துரத்தி விட்டுட்டார். அந்த கோபத்தை மனசுல வைச்சிகிட்டு அஸ்வின் மண்டையை உடைச்சிடீங்க இல்ல?
போதாதுன்னு கோலி வேற 70 ரன். ரைனவும் கோலியும் ஒரே ஏஜ் பசங்களாச்சே, இந்த மாதிரி ஆடனா பசங்களுக்குள்ள ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துடுமேனு நினைச்சி பார்க்க வேண்டாமா? அதான் எங்க தல (என்னது அஜித்தா? யப்பா அவரை சொல்லலப்பா) டிரெஸ்ஸிங் ரூம் ல போட்டுது பாரு மீட்டிங். ஏதோ சின்ன பசங்க, தெரியாம அடிச்சிட்டானுங்க. மன்னிச்சி விட்டுட்டு நாம நல்லா ஆடுவோம்னு சொல்லி முரளியையும் ஹஸியையும் அனுப்பி வைச்சா, மறுபடியும் உங்க வேலைய கான்பிச்சிடீங்க. அதான் பத்ரிய அனுப்பி மொக்கை போடா சொல்லி உங்களை எல்லாம் கடுப்பு ஏத்த வைச்சிச்சி எங்க தல (எங்களையும் தான்).



அவனையாவது ஒழுங்கா வைச்சி வாழ்ந்து இருக்கலாம். தேவை இல்லாம அவனையும் வெளிய தள்ளி எங்க சிங்கத்தை களமிரக்கிடீங்க. கெயில் அடிச்ச ஒரு சிக்சருக்கு பதிலா ஒரு 6 அடிச்ச எங்க தலையையும் அவுட் ஆக்கி நீங்க பட்டீங்கலே ஒரு சந்தோசம்? அதான் இதுக்கு மேல உங்களை ஆட விட கூடாதுன்னு ஒரு போலரை (புண்ணியவான் மோர்கல் - மூனு 6 ஒரு 4 னு 10 பாலுக்கு 28 ரன்) இறக்கி விட்டு அடி பின்னிவிட்டோம். ரன் ரேட் 14 வேணும் நா கூட அசால்ட்ட அடிச்சோம் பார்த்த இல்ல ராயல் ? (ஆஸ்திரேலிய போலர் என்னமா பேட் பன்னராங்கடா யெப்பா? செம வொர்த்.)


அப்பறம் ரைனாவ 73 அடிக்க சொல்லி சமம் பண்ணிட்டோம். பாவம் புள்ள . மான் ஆப் தி மேட்ச் வாங்கும் போது கூட சிரிக்க முடியல. கால்ல அடி பட்டிருக்கு போல. இனி (கோலி -ரைனா)அவங்களுக்குள சண்டை வராது இல்ல? அப்பறம் ஆறு 6 வேற அடிச்சி அந்த தடி மாட்டு பயல வேற அடக்கிட்டோம். அப்ப கூட அவனை பால் போடா வைச்சி நாலு ஓவர் ல 19 ரன் தான் கொடுத்தீங்க இல்ல?

ஒரு வழியா பைனளுக்கு போய்ட்டோம். மறுபடியும் தப்பி தவறி நீங்க அங்க வந்தா கூட நல்லா புள்ளைங்களா கோப்பை வேணும்னா கேட்டு வாங்கிக்கணும். அதை விட்டுட்டு ஏதாவது பிரச்சனை பண்ணீங்க? ப்ளாக் டைட்டிலை படிங்க. அதை தான் மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கும். கொய்யால யாரு கிட்ட வைச்சிகிறீங்க?

பாதி பேர் மேட்ச் ஐ பார்த்து இருக்க மாட்டீங்க . சென்னை தோத்துடும்னு டிவியை ஆப் பண்ணிட்டு இருப்பீங்க. உங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிகிரன். நம்பிக்கை தான் வாழ்க்கை. செம மேட்ச். மிஸ் பண்ணிடீங்க போங்க.

வின் பண்ணுவோம்னு தலைக்கே 100% நம்பிக்கை இல்லையம். அப்பறம் நமக்கு எங்க இருந்து இருக்க போகுது இல்ல?


சரி தோத்திருந்தா என்ன தலைப்பு வைச்சி இருக்கலாம்?

தோத்தாலும் சிங்கம் சிங்கம் தான்.....!
ஆனா ப்ளாக் எழுத தான் மனசு வந்து இருக்காது.

24-05-2011 11.55 pm .

Friday, May 13, 2011

ஜெய்க்க போவது எந்த சேனல்?


ஜனநாயகத்தின் நான்காவது தூண், பத்திரிக்கை எனப்படும் ஊடகத்துறை. ஜனநாயகத்தை தாங்கி பிடிக்கும் தூண்களில் (நாடாளுமன்றம்-சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை) மக்களுக்காக உலக செய்திகளை நேர்மையாக நடுநிலைமையோடு சேகரித்து தர வேண்டிய பலமான தூண். மற்ற மூன்று துறைகளின் அன்றாட செயல்பாடுகளை மக்களிடம் சேர்த்து தெரியப்படுத்த (தெளிவுப்படுத்த) வேண்டிய துறை. இந்திய சுதந்திரத்திற்க்கும், மக்களிடம் கல்வி, நோய், மருத்துவம், மற்றும் அனைத்துவிதமான விழிப்புனர்விர்க்கும் பயன்பட்ட இந்த துறை சமீபகாலமாக வியாபாரத்தை நோக்கி சென்று விட்டது. வியாபாரத்தை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த அரசியல் கட்சிகளின் சார்ப்பாக செய்தி ஊடகங்கள் தோன்றிய பிறகு செய்திகளை திரித்து கூறுவதும், அவர்களுக்கான செய்திகளில் (சப்பை மேட்டர்னா கூட) முன்னுரிமை கொடுப்பதும் அதிகமாகிவிட்டது.

எல்லா கட்சிகளுக்கும் கொள்கை இருகின்றதோ இல்லையோ , நிச்சயம் ஒரு ஊடகம் தேவைப்படுகின்றது. காரணம் நடு நிலை ஊடகங்கள் இவர்களின் செய்திகளை சிறிய அளவில் மட்டுமே வெளியிடுவதும், மற்ற கட்சிகள் அவர்களின் ஊடகங்களை கொண்டு அவர்களை முன்னிலைப்படுத்துவதாலும்
இவர்களின் வளர்ச்சிக்கும் ஊடகம் தேவையானதாக இருக்கின்றது. சீமான் கூடிய சீக்கிரம் சேனல் ஆரம்பித்துவிட்டாலும் ஆச்சரியபடுவதர்க்கில்லை.

ஒரு கட்சி தலைவரை ஆரம்பத்தில் புறக்கணித்த சில கட்சி சேனல்கள் அவர் சொந்தமாக டிவி சேனல் ஆரம்பித்த உடன் சிறு அளவில் செய்திகளை வெளியிட ஆரம்பித்தது. அதே நேரத்தில் வேட்ப்பாளரை அடித்தார் , குடித்தார் , உளறினார் என்று தேர்தல் நேரத்தில் செய்தியை வெளியிட வேண்டும் என்பதை தாண்டி அவரின் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரை நாள் முழுவதும் அதே சேனல்கள் காட்டின.

பதிலுக்கு இவர் கட்சி சேனலும் மற்ற கட்சி தலைவரின் தேர்தல் பேச்சில் ஏற்ப்பட்ட தவறுகளை தான் பிரதானமாக்கி கொண்டிருந்தன. மக்களுக்கு இவர்களின் சேனல்களை தாண்டி பார்க்க ஒரு சில சேனல்கள் மட்டுமே இருந்தன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. பாலிமர் , ராஜ், விஜய் போன்ற சேனல் எந்த கட்சியையும் முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும் விஜய் சேனல் airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தேர்தலுக்கோ செய்திகளுக்கோ எப்போதும் தருவதில்லை.



இப்போதும் 2g இல் ஊழல் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஊடகங்களும் இருக்கத்தானே செய்கின்றது? ஈழ தமிழர் (என்று கூட தனிமை படுத்த வேண்டாம் அவர்களும் மக்கள் தானே? எந்த மொழி பேசினால் என்ன? அவர்கள் கொல்லப்படும் போது சாதாரண மனிதாபிமானம் உள்ள மனிதன் கூட மனதளவில் வருத்தப்பட்டு இருப்பான்) பிரச்சனையில் ஒரு மத்திய கட்சியின் கூட்டனிக்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்துவிட்டு தேர்தல் வந்த உடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட உடன் தங்கள் ஊடகங்களை கொண்டு தங்களுக்கு தான் உண்மையில் அக்கறை உள்ளது போல செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை என்ன சொல்வது?

மக்களிடம் உண்மையை சொல்லி அவர்களை சுயமாக சிந்திக்க வைக்க வேண்டிய ஊடகங்கள் தங்களின் தேவையை அவர்கள் மேல் திணித்துக்கொண்டு இருக்கின்றன.அந்த வகையில் பெரும்பாலான சேனல்கள் கட்சி மாநாட்டின் மேடை நிகழ்ச்சியை போல தான் செயல்பட்டு கொண்டு இருந்தன? கருத்துக்கனிப்புகள் என்ற பெயரில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று முழக்கமிட்டன. அந்த வகையில் எந்த சேனல் ( லின் எண்ணம் அல்லது ஆசை அல்லது எதிர்பார்ப்பு) வெற்றி பெற போகின்றதோ தெரியவில்லை...!

என்னோட கெஸ் j வும் c யும் தான். பார்க்கலாம் இன்னும் கொஞ்சம் நேரத்தில்....

இதெல்லாம் ஒரு பரபரப்பா பாஸ்?

கட்சி சார்ந்த ஊடகங்கள் ஒழிந்தால் தான் நான்காவது தூண் நிமிர்ந்து நிற்கும். இல்லையேல் நான்காவது தூண் என்ற ஒன்று வருங்காலங்களில் வார்த்தையாக கூட உச்சரிக்கப்பட மாட்டாது.


இன்றைய போட்டோ
தாத்தா பேரன் உறவுகளை பார்க்க முடியாமல் போன இந்த காலத்தில் கடற்க்கரைக்கு தனியாக வந்திருந்த தாத்தாவும் பேரனும்.


இதையும் பார்க்கலாமே?

Thursday, May 5, 2011

vantage point - 8 கோணத்தில் ஒரு அதிரடி த்ரில்லர்

வேண்டேஜ் பாயிண்ட் 2008
வணக்கம் நண்பர்களே....!

பொதுவாக ஒரு திரைப்படத்தின் கால அளவு ஒன்னரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை இருக்கும். அந்த கால அளவுகளில் கதையின் தன்மைக்கு ஏற்ப குறைந்த பட்சம் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களில் இருந்து ஒரு முழு மனிதனின் வாழ்க்கை வரலாறு வரை காட்சி படுத்தப்பட்டிருக்கும். ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் நிறைந்த பல படம் இருந்தாலும் நான் ஏற்க்கெனவே வலைப்பதிவில் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த படங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது என் எண்ணம். அதே போல தமிழில் சிங்கார சென்னை, (குவாட்டர் கட்டிங்) என்ற திரைப்படங்கள் ஒரு நாள் சம்பவங்களில் எடுக்கப்பட்டதாக கேள்வி பட்டிருக்கின்றேன். மற்றபடி நாம் பார்க்கும் படங்களில் பல நாள் நடக்கும் நிகழ்வுகள் தான் படமாக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் நடக்கும் சம்பவங்கள் என்பதை ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்களுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். சுயம்வரம் ஒரு நாளில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அது ஒரு நாளில் நடைபெறும் சம்பவம் அல்ல என்பதை மனதில் கொள்ளவும். அதே போல நியுட்டனின் மூன்றாம் விதி கூட ஒரு நாளில் பழி வாங்கும் திரைக்கதையாக இருந்தாலும் பிளாஷ் பேக் யுக்தியில் பல நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் சம நேரத்தில் காட்டப்படும்.



ஒரு படம் இரண்டு மணி நேரம் என்று வைத்துக்கொள்வோம். அந்த இரண்டு மணி நேர காட்சி என்பது குறைந்த பட்சம் இரண்டு மணி நேர நிகழ்வாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் 23 நிமிட சம்பவங்கள் ஒரு படமாக காட்சி படுத்தினால்? அது தான் vantage point (2008).



23 நிமிட காட்சி என்ற உடன் எல்லாமே slow motion னில் காட்டப்பட்டிருக்குமோ என்று நினைக்க வேண்டாம். பண்டி சரோஜ் குமார் இயக்கிய போர்க்களம் என்றதிரைப்படம் அதிகமான slow motion காட்சி நிறைந்த தமிழ் திரைப்படம் . ஏறக்குறைய 15 நிமிட நேரத்திற்குள் ஒரு குற்றம், அதற்க்கான திட்டம், அதன் காரணம், திட்டமிட்டவர்கள், புலனாய்வு, தண்டனை, மீட்பு என்ற எல்லாமே கட்டப்படுகின்றது. அது எப்படி?

படத்தின் கதையின் கருவும், திரைக்கதையின் போக்கும் அதன் poster design லில் எவ்வளவு அழகாக டிசைன் (வரைகலை) செய்யப்பட்டு இருக்கின்றது பாருங்கள். 8 strangers, 8 point of view (POV), 1 truth. படம் பார்க்கும் முன்பு புரியவில்லை என்றால் கூட படம் முடிந்த உடன் பார்த்தால் புரிந்து விடும்.

படத்தின் கதை இதுதான். ஒரு நாட்டின் பிரதமர் இன்னொரு நாட்டிற்கு வந்து பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போதே கொலை செய்யப்படுகின்றார். யார், எப்படி, எதற்காக கொலை செய்தார்கள், அவர்கள் எப்படி கண்டுபிடிக்கப்படுகின்றார்கள், என்பதை பல சஸ்பென்ஸ் காட்சிகளுடன் திரைபடத்தில் பாருங்கள். அந்த ஒருகொலை சம்பவம் திரும்ப திரும்ப அந்த 8 பேரின் மூலம் வெவ்வேறு கோணத்தில் (POV) இருந்து (நிகழ்வதுதான்) காட்டப்படுவதுதான் திரைக்கதையின் சிறப்பம்சம்.

ஒரு சிறந்த non-linear திரைப்படம் இது. இதே படத்தை எடிட்டிங் (படத்தொகுப்பு) இல் ஒரு linear திரைப்படமாக மாற்ற முடியும் என்றாலும் முதல் 50 நிமிடம் நிச்சயம் நமக்கு போரடித்துவிட வாய்ப்பு இருக்கின்றது. அதனாலேயே படம் ஆரம்பித்த 10 நிமிடத்திற்குள் நம்மை சீட்டின் நுனியில் உட்காரவைத்து விடுகின்ற மாதிரி நான் லினியர் ஆக மாற்றப்பட்டு இருக்கின்றது. எப்படி என்றால் அடுத்த 10 நிமிடம் தான் கிளைமாக்ஸ். ஆனால் அது கடைசியாக தான் காட்டப்படும்.

கிளைமாக்ஸ் இல் ஒரு குழந்தைக்காக இந்த திட்டத்தை தோற்கும் நிலைக்கு மாற்றுவார்களா என்ற கேள்வி எழும்பொது நமக்கு இரண்டு பதில்கள் தோன்றலாம். 1. தேவை இல்லாமல் ஒரு உயிரை எடுக்க நினைப்பதில்லை தீவீரவாதிகள். அல்லது 2. அப்போதைக்கு வண்டியை நிறுத்தி விட்டு பின்பு வளைந்து தப்பி சென்றால் மட்டுமே போலீசாரின் துரத்தலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தின் காரணமாக இருக்கலாம்.
* முதல் காரணம் தவறாக இருக்கலாம். காரணம் அவர்கள் நிறைய கொலை செய்கின்றார்கள்(குண்டுவெடிப்பு மூலம்) .
* இரண்டாவது காரணம் சரியாக இருக்கலாம். ஏன் என்றால் விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு அவ்வளவு சீக்கிரம் அவர்கள் தப்பி செல்ல முடியாது. காரணம் அது மேலை நாடு. இந்தியா அல்ல.

போஸ்டர் டிசைன், திரைக்கதைக்கான திட்டமிடல், எடிட்டிங், நான்-லினியர் ஸ்டோரி டெல்லிங் ஆகியவற்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த vantage point என்னும் வச்ச குறி தப்பாது(தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளிவந்த தலைப்பு).

படத்தின் இயக்குனர் peter travis. இது தான் இவருக்கு முதல் திரைப்படம். அடுத்த படம் 2012 இல் வெளி வருகின்றதாம்.


டைம் இருந்து , படிக்க எண்ணம் இருந்தா இதையும் படிங்க...!


இனி எல்லா பதிவுகளிலும் நான் பிடித்த ஒரு படம் சேர்க்க ஆசை.
இந்த படம்: சென்னை கடற்கரையில் அலையை கண்டு ஓடிவரும் சிறுமி.