Monday, January 10, 2011

கவிதை என்னும் கிறுக்கல்கள் 3

நீ என்னுடன் இருந்த அந்த ஒரு நிமிடத்தை எழுதிட - எனது
ஒரு வருட நாட்குறிப்பு போதாது எனக்கு...!


உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று கேட்டபோது
தெரியாது என்று பொய் சொன்னேன் !
உன் பெயர் தெரிந்து இருந்தும்...


காதலிப்பவர்கள் எல்லாம் நன்றாக கவிதை எழுதுவார்களாமே...!
இரவு முழுவதும் யோசித்து விடியற் காலையில் தான் எழுதிமுடித்தேன்
படித்துப்பார்த்தால் திருப்பும் பக்கமெல்லாம் உன் பெயர் மட்டும்....



நீ எழுதி இருப்பது எதுவும் கவிதை போல தெரியவில்லையே?
உண்மைதான்..
அதோ அந்த கூட்டதில் பார்,
வெள்ளை நிற துப்பட்டாவும் , கருமை நிற கூந்தலும்
காற்றில் தவழ நடந்து செல்கின்றது ..
இந்த உலகின் ஒட்டுமொத்த கவிதையும்.....!

No comments: