Friday, March 11, 2011

கடற்கரை பொழுதுகளில்....



கடற்கரை பொழுதுகளில்....

நான் அவள் அது
அவள் அதனோடு விளையாடிக்கொண்டு இருந்தாள்.
நான் அமைதியாய் நின்றுகொண்டு இருந்தேன்.
நான் அவளோடு விளையாடிக்கொண்டு இருந்தேன்.
அது சத்தம் போட்டுகொண்டே இருந்தது.
பின்பு,
நானும், அவளும், அதனோடு விளையாடிக்கொண்டு இருந்தோம்
கடற்கரை பொழுதுகளில்......



அலைகள் எல்லாம் சுனாமிதான்

கட்டிய வீட்டை
பறிகொடுத்துக்கொண்டே இருந்தது
கடற்கரை நண்டு



கூச்சம்

நான் நெருங்க, அது விலக,
அது நெருங்க, நான் விலக,
தொடாமல் விளையாடிக்கொண்டு இருந்தோம்.
நானும் அலையும்......!


நானும் நண்டும்

கடற்கரையில் பந்தயம்
அடைய வேண்டிய இடம் வளை
எப்போதும் வெற்றி
நண்டுக்குத்தான்......

1 comment:

Anonymous said...

பரவா இல்ல....!